என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூட்ட நெரிசல்"
- கட்சி நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார்.
- கடந்த மாதம் 29ம் தேதி கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்
குண்டூர்:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார். விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சந்திரபாபு நாயுடு சிலருக்கு சேலைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான பெண்கள் முண்டியடித்து மேடையை நோக்கி சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். இதில் கால்களில் மிதிபட்டு 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதேபோல் கடந்த மாதம் 29ம் தேதி சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டது.
- இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமராவதி:
முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆந்திராவின் கந்துகுருவில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்
ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் தெலுங்கு தேசம் கட்சியினர் என கூறப்படும் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாகவும், சிலர் படுகாயமடைந்ததாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அத்துடன், காயமடைந்தோரை மருத்துவமனையில் நேரில் சென்று சந்திரபாபு நாயுடு ஆறுதல் தெரிவித்தார்.
- அசன்சோல் 27வது வார்டு கவுன்சிலராக உள்ள பாஜக தலைவர் சைதாலி திவாரி இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
- நெரிசல் ஏற்பட்டதையடுத்து சுவேந்து அதிகாரி அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.
அசன்சோல்:
மேற்கு வங்காளத்தின் மேற்கு பர்த்வான் மாவட்டம் அசன்சோல் நகரில் பாஜக சார்பில் மக்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு போர்வை பெற்றுச் சென்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி, மற்றொரு முக்கிய தலைவரான ஜிதேந்திர திவாரி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. நெரிசல் ஏற்பட்டதையடுத்து சுவேந்து அதிகாரி அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.
இக்கூட்டத்தில் சுமார் 5000 பேர் திரண்டுள்ளனர். போர்வை வாங்குவதற்காக முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்கள் சந்த்மணி தேபி(55), ஜிகாலி பவுரி (60), பிரித்தி சிங் (12) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அசன்சோல் 27வது வார்டு கவுன்சிலராக உள்ள பாஜக தலைவர் சைதாலி திவாரி, மத அமைப்பின் கீழ் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். காவல்துறையிடம் அனுமதி பெறாமல் பாஜக இந்நிகழ்ச்சியை நடத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி அரசு பஸ்களில் 4 பெண்களிடம் 19 பவுன் நகை அபேஸ் செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- டவுன் பஸ்களில் ஏறும் சமூக விரோதிகள் நகை மற்றும் பணத்தை நைசாக திருடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
மதுரை
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாண வர்கள், வேலைக்கு செல் ேவார் பயணிப்பதால் அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதும்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகரில் டவுன் பஸ்களில் ஏறும் சமூக விரோதிகள் நகை மற்றும் பணத்தை நைசாக திருடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் சில பெண்களும் ஈடுபட்டு ள்ளனர்.
பஸ்சில் அருகில் நிற்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் சக பயணிகளுடன் கலந்து நிற்கும் கொள்ளை கும்பல் பயணிகள் அசந்த நேரத்தில் பணம்-நகையை திருடிச் செல்கின்றனர்.
மதுரை நகரில் குறிப்பிட்ட வழித்தடங்க ளில் 4 பெண்கள், 19 பவுன் நகையை பறிகொடுத்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள தண்டல்காரன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கற்பகவள்ளி (வயது 25). சம்பவத்தன்று மாலை இவர் மண்டேலா நகரில் இருந்து அரசு பஸ்சில் பழங்காநத்தத்துக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் கற்பகவள்ளி வைத்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.400 ஆகியவற்றை திருடிச் சென்றார்.
மதுரை பழங்காநத்தம், மேலத்தெருவை சேர்ந்த பெரியசாமி மனைவி ஜோதிமணி (52). சம்பவத் தன்று காலை இவர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வசந்த நகருக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது மர்மநபர், ஜோதிமணி அணிந்திருந்த 6 பவுன் நகையை கூட்ட நெரிசலை பயன்படுத்தி நைசாக பறித்துச்சென்றார்.
பழங்காநத்தம், பொட்டூரணி தெருவை சேர்ந்த பரமசிவம் மனைவி லோகாமணி (50). இவர் சம்பவத்தன்று மதியம் திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள வங்கிக்கு சென்றார். அதன் பிறகு பைக்காராவுக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது மர்ம நபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, 3 பவுன் நகையை திருடிச் சென்றார்.
மதுரை திருப்பரங்கு ன்றம், பெரிய ரத வீதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி பிறைகன்னி (55). இவர் சம்பவத்தன்று மதியம் ஆண்டாள்புரம் பஸ் நிலையத்தில் இருந்து அழகப்பன் நகருக்கு அரசு பஸ்சில் சென்றார்.
அப்போது மர்ம நபர் பிறைகண்ணி கொண்டு வந்திருந்த பையில் இருந்த 6 பவுன் தங்க வளையல், 2 பவுன் நெக்லஸ் ஆகியவற்றை திருடிச் சென்றார்.
மேற்கண்ட 4 சம்பவங்களும் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. எனவே போலீசார் துரிதமாக செயல்பட்டு பஸ்சில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் கும்பலை பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
- கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டது.
- குறுகிய தெருவில் சிக்கித் தவித்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
இடோவான்:
தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறும். இந்த திருவிழாவில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இடோவான் மாவட்டத்திற்கு வருகை தருவார்கள். கொரோ தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்ற நிலையில் பேய் வேடமணிந்த தென் கொரிய மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து முன்னோக்கி தள்ளப்பட்ட பெரிய கும்பலால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் நசுக்கப்பட்டனர்.
அப்போது மூச்சுத் திணறி உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என சியோல் நகர மீட்புப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் 74 உடல்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், தெருக்களில் வைக்கப்பட்டிருந்த 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படும் வகையில் அருகிலுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்தது குறித்த அறிந்த தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். உடனடியாக காயமடைந்தவர்களை காப்பாற்ற மருத்துவ குழுக்களுக்கு அவர் உத்தரவிட்டதாக அதிபர் மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளார்.
- பஸ்களில் தொங்கி செல்லும் பயணிகளுக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆனால் மிகவும் குறைந்த அளவு பஸ்கள் இயக்கபடுவதால் பயணிகள் அதிக கூட்டநெரிசலுடன் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இருந்து சிவகங்கைக்கு தினமும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசுஅலுவலர்கள், நோயாளிகள் என ஏராளமான பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் மிகவும் குறைந்த அளவு பஸ்கள் இயக்கபடுவதால் பயணிகள் அதிக கூட்ட நெரிசலுடன் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. படிகளில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் தொற்றி கொண்டு செல்லும் நிலை உள்ளது.
இதேபோல் மானாமதுரை வழியாக திருச்சி வரை குறைந்த அளவில் பஸ்கள் இயக்கபடுவதால் மானா மதுரையில் ஏறும் பயணிகள் திருச்சி வரை நின்று செல்லும் நிலைஉள்ளது. திருச்சியில் இருந்து மானாமதுரை வழியாக இரவு நேரத்தில் பரமக்குடி ராமேசுவரம் சென்ற அரசுபஸ்களும் நிறுத்த பட்டால் மானாமதுரை பயணிகள் திருச்சியில் இருந்து மதுரை வந்து சுற்றி வரும் நிலை உள்ளது.
எனவே மானாமதுரை சிவகங்கை இடையே கூடுதல் பஸ்களும் மானாமதுரை வழியாக திருச்சி க்கு கூடுதல் பஸ்களை இயக்கவும், மானாமதுரை வழியாக திருச்சியில் இருந்து ராமேசுவரம் பரமக்குடி செல்லும் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மானாமதுரை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்